Monday, March 1, 2021

9th Chennai Film Festival 2021 : Tamil films


9வது சென்னை சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவில்

தேர்வு செய்யப்பட்ட படங்கள் : 

1. ஐ யம் எ செக்குலரிஸ்ட் [ ஆவணப்படம்]


கதைக்கரு: இந்த ஆவணப்படம், தோழர் சிநேகா பார்த்திபராஜா அரசியல் சக்திகளிடம் சாதிமதம் மறுப்பு சான்றிதழ் பெற பத்து வருடம் போராடிய வரலாறை விவரிக்கிறது.

தொகுப்பு மற்றும் இயக்கம் - சூர்ய குமார் ஆறுமுகம்.


2. சாதி சனம்


கதை: இன்னும் இந்திய கிராமங்களில் தீண்டாமை நிலவுகிறது என்பதை உணர்த்தும் கதை.

எழுதி இயக்கியவர்: எஸ்.கார்த்திக் தமிழ்பிரியன்.


3. காரணம்

இயக்கம்: விக்னேஷ் பவித்திரன்.


கதைக்கரு:

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய சிறுகதை "காரணம்", நகரம் தொகுப்பில் 1971 ஆம் ஆண்டு வெளியானது

பெற்றோர்களின் நடத்தையால் அவர்களது மகன் எப்படி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதை விளக்கும் கதை.


4. நான் யார்

எழுத்து,இயக்கம்: நிர்மல் நிர்மி.


கதைக்கரு: வலியவர்கள் எளியவர்களை வேட்டையாடும் உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை.


5. நான் பேச நினைப்பதெல்லாம்

எழுத்து,இயக்கம்:நேசமணி.


நேரடி ஒலிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பு:செந்தில் குமரன் சண்முகம்.

கதைக்கரு: இரு நண்பர்களுக்கிடையே இருந்தது நட்பா…காதலா…என்பதை விவரிக்கிறது திரைக்கதை.


6. லட்சுமி விலாஸ்

இயக்கம்: சோமசுந்தரம்.


கதைக்கரு: ஆணதிக்க சமூகத்தில் பெண்கள் வதை நிரந்தர வாதை என்பது உண்மை.

பெண்ணுரிமைக்கான குரலும் ஒரு குடம் விஷத்தில் ஒரு துளி பாலாக மறைந்து போகும் உண்மையையும் உரைக்கிறது.


7. பார்வை

எழுத்து,இயக்கம்: டினு [ டி.தினேஷ்குமார்]


கதைக்கரு: ஆணாதிக்க கோணல் பார்வையை நேராக்க முயலும் கதை.


8. மடமைக்கு அஞ்சேல்

எழுத்து&இயக்கம்: பாலமுருகன்,மலேசியா.



கதைக்கரு: மலேசியாவில் சகோதரனும் சகோதரியும் இணைந்து நாதஸ்வரம் மற்றும் தவில் வாசித்து வருகிறார்கள்.

அவர்களை படைப்பூக்கமாக கொண்டு இந்த குறும்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆணாதிக்கத்தை விளாசி பெண் விடுதலையை பேசுகிறது.


9. பூட்ஸ்

இயக்கம்: ஆர்.சிவா.


திரைக்கதை மற்றும் தயாரிப்பு: ஆர்பி.வினு,மலேசியா.

கதைக்கரு: காவல்துறையின் அராஜக வரலாற்றின் ஒரு துளி.


10. சிரிக்கும் துர்கா

இயக்கம்: சரவணன் பழனிச்சாமி.


கதை மற்றும் திரைக்கதை: ஜி.அசோக் நவீன்.

கதைக்கரு: சமூகத்தில் இன்றும் நிலவும் குழந்தை திருமணத்தின் ஒரு சாட்சியாக திகழ்கிறது இக்கதை.


11. சவுண்டு

திரைக்கதை&இயக்கம்:சிநேகா பெல்சின்


கதைக்கரு: அதிகார வர்க்கத்தின் அத்துமீறலையும்,அடங்கி போகும் தன்மையையும் விமர்சிக்கும் திரைக்கதை.


12.மோடி&எ பியர்

எழுதி இயக்கியவர்:தினா சந்திரமோகன்


கதைக்கரு:  ஒரு வெற்றிகரமான காதல் அரசியல் விவாதத்தால் எப்படி உடைகிறது என்பதைப் பற்றி இப்படம் பேசுகிறது.


13. எழில்

கதை,திரைக்கதை,ஒளிப்பதிவு,இயக்கம்:விமல்ராஜ்,இலங்கை.


கதைக்கரு: தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய மாவீரர்களை போற்றி பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கதை.


14.சுயரூபம்

திரைக்கதை,ஒளிப்பதிவு,நேரடி ஒலிப்பதிவு,ஒலி வடிவமைப்பு,தொகுப்பு,இயக்கம்:செந்தில் குமரன் சண்முகம்.


கதை:கு.அழகிரிசாமி.

கதைக்கரு:சாதிய பெருமிதம் சோறு போடாது என்ற எளிய உண்மையை உரைக்கும் கதை.

[உலகிலேயே முதன்முதலாக திரையிடப்படுகிறது]


நிகழ்ச்சி அமைப்பு: மறுபக்கம் அமைப்பு, மதுரை.

ஒருங்கிணைப்பாளர்: இயக்குநர் ஆர்.பி.அமுதன்.


தேர்வு செய்யப்பட்ட படங்களின் படைப்பாளிகள், தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.


அன்புடன்,

உலக சினிமா பாஸ்கரன்,

இன்ஷா அல்லாஹ் திரைப்பட இயக்குநர்.

2 comments:

  1. Anaithum Arumai agam magizhdhen I am S.B.Samy Spoken Hindi Master of Erode and also an Artist 9842407349 my mbl no

    ReplyDelete
  2. How to submit my short film to your film festival

    ReplyDelete

14th Chennai Int Doc & Short Film Festival 2026

14th Chennai Int Doc & Short Film Festival 2026 21-28 February, multiple venues, Chennai Organised by MARUPAKKAM   Entries invited! Clic...